நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நகருக்கு சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென வியட்நாம் கடலில் விழுந்து காணாமல் போனது. அதில் பயணம் செய்த 239 பயணிகளின் கதி என்ன ஆனது என்று தெரியாத நிலையில் இந்த விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இந்த சந்தேகம் வருவதற்கு முக்கிய காரணம் இந்த விமானத்தில் பயணம் செய்த இருவர், திருடப்பட்ட பாஸ்போர்ட்டுக்கள் மூலம் பயணம் செய்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. திருடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் மூலம் தீவிரவாதிகள் யாரேனும் கடத்தி இந்த விமானத்தை மூழ்கடித்திருபார்களா? என்ற கோணத்திலும் மலேசிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.