தினகரனை அடுத்து மேலும் இருவர் கைதா? டெல்லி போலீசின் அதிரடி திட்டத்தால் பரபரப்பு
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள தினகரனை அடுத்து இந்த விஷயத்தில் தொடர்புள்ள தினகரனுக்கு நெருக்கமான விஐபி ஒருவரையும் கைது செய்ய டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி அதிமுக எம்பி ஒருவரும் டெல்லி போலீசார் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவரும் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா பெங்களூர் சிறையிலும், தினகரன் டெல்லி சிறையிலும் இருக்கும் நிலையில் தினகரனுக்கு ஆதரவாகவும், வலதுகரமாகவும் இருந்த அதிமுக விஐபிகளுக்கு டெல்லி போலீஸ் குறி வைத்துள்ளதால் சசிகலா கூடாரமே அதிமுகவில் இருந்து காலியாகிவிடும் என தெரிகிறது.
எனவேதான் தினகரன் கைது நடவடிக்கைக்கு வெளிப்படையாக நாஞ்சில் சம்பத் தவிர வேறு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும் தினகரன், சுகேஷுக்கு கொடுத்த பணம் ஹவாலா பணம் என்பதும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள ஹவாலா கும்பலை சேர்ந்தவர்கள் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.