ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாகி சூடு: பெரும் பரபரப்பு
கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று இரான் நாட்டின் பாராளுமன்றத்திற்குள் தீவிரவாதிகள் மூன்று பேர் நுழைந்து கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டதால் இருவர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்
ஈரானை சேர்ந்த மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த செய்தியில், ”நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நாடாளுமன்றத்துக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இருவர் பலியாகியதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாடாளுமன்ற தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மட்டுமின்றி உலகத்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.