shadow

Parliament-Sri-Lanka-interiorஇலங்கை நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களை ரகசியமாக படம்பிடித்த இரண்டு இந்தியர்களை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று இரண்டு இந்தியர்களை சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த லேப்டாப்பில் இலங்கையின் பாராளுமன்றம் கட்டிடம், பிரதமர் அலுவலகம் மற்றும் வீடு, அதிபர் மாளிகை ஆகியவற்றின் புகைபடங்களை பதிவு செய்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் இரண்டு இந்தியர்களையும் கைது செய்துள்ளதாக கொழும்பு நகர சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர் அஜித் ரோஹனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் இரண்டு பேர்களிடம் இருந்து லேப்டாப், கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply