நடுவானில் இரண்டு விமான பயணிகள் மரணம்: கொரோனா பாதிப்பா?

சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா சென்ற விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு பயணிகள் திடீரென உயிரிழந்ததால், விமானம் அவசரமாக இலங்கையில் தரையிரக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அதுமட்டுமின்றி மேலும் 2 பயணிகள் உடல் நலக்குறைவால் இலங்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மரணம் அடைந்த பயணிகளுக்கும், உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கும் கொரோனா பாதிப்பா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

நடுவானில் இரண்டு விமான பயணிகள் மரணம் அடைந்துள்ளதால் சக பயணிகளிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply