துல்கார் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி’ படத்தால் இரண்டு நபர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
கோவையை சேர்ந்த ஜெய்சங்கர் என்ற சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் தனது காதலியை ‘ஓகே கண்மணி’ படம் பார்க்க அழைத்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் ஜெய்சங்கர் குடிபோதையில் இருந்ததால் படத்துக்கு வர முடியாது என்று அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. படத்துக்கு தன்னுடன் வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக ஜெய்சங்கர் மிரட்டியும், அவரது காதலி படத்துக்கு வரமறுத்துள்ளார். இந்நிலையில் மனம் வேதனை அடைந்த ஜெய்சங்கர் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காதலன் தூக்கில் தொங்கிய தகவல் கிடைத்து அவரது கல்லூரி மாணவியான காதலி கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
அதே கோவையில் இதுபோன்ற மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. கோவையை சேர்ந்த சத்தியபிரியா என்ற 31 வயது குடும்பத்தலைவி தனது கணவர் பழநிச்சாமியிடம் ‘ஓகே கண்மணி’ படத்திற்கு தன்னை அழைத்து செல்லுமாறு வற்புறுத்தியதாகவும், ஆனால் தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும் இன்னொரு நாள் படத்திற்கு அழைத்து செல்வதாக கூறியதாகவும் தெரிகிறது. ஆனால் இதனால் சோகமான சத்தியபிரியா உடனே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும் தகவல் கூறுகிறது. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ஓகே கண்மணி’ படத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் கோவை பகுதியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.