சமூக வலைத்தள டிரெண்டால் பரபரப்பு

ஜூன் 15ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார் என்பது தெரிந்ததே

இதனை அடுத்து கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன

கல்லூரி மாணவர்கள் டுவிட்டரில் #CancelTNSemesterExams என்ற ஹேஷ்டேக்கை ஏற்படுத்தி அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்

10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்ததை தொடர்ந்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் டிரெண்ட் செய்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

மேலும் இதுகுறித்து அரசியல்வாதிகளும் பேசத் தொடங்கினால் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது போல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply