2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
துபாயில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2016 மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 2016ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோபை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் அதற்கு அடுத்த அதாவது, 2021ல் உலக கோப்பை டெஸ்ட் போட்டி மற்றும் 2023-ல் உலக கோப்பை ஒருநாள் போட்டியையும் இந்தியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை யை 2007ல் இந்தியாவும், 2009ல் பாகிஸ்தானும், 2010ல் இங்கிலாந்து அணியும், 2012ல் மேற்கிந்திய தீவு அணியும், 2014ல் இலங்கையும் கைப்பற்றியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.