“குங்குமப்பூவு” உள்பட பல முன்னணி டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஸ்வாதி நேற்று ஐதராபாத் நகரில் இரண்டு ஆண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது போலீஸாரால் கையும் களவுமாக பிடிபட்டார். இதனால் தொலைக்காட்சி மற்றும் டோலிவுட் நடிகைகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் நகரில் உள்ள மோதிநகரில் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் பிரபல நடிகை ஒருவர் விபச்சாரம் செய்து கொண்டிருப்பதாக மோதிநகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து சிறப்புபடை ஒன்று குறிப்பிட்ட அந்த அபார்ட்மெண்டை சுற்றி வளைத்தது. அதன் பின்னர் நடைபெற்ற அதிரடி சோதனையில் நடிகை ஸ்வாதி விபச்சாரம் செய்துகொண்டிருந்ததை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். நடிகை ஸ்வாதி உள்பட மூன்று பேர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மோதிநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் நடிகை ஸ்வாதியை விசாரணை செய்த போலீஸார் இந்த நெட்வொர்க்கில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் விரைவில் அவர்களையும் பொறி வைத்து பிடிப்போம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஸ்வாதிபாசு விபச்சார வழக்கில் சிக்கிய பரபரப்பு அடங்கும் முன்பே இன்னொரு முன்னணி நடிகை கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1yjMAAm” standard=”//www.youtube.com/v/IBkti560VZU?fs=1″ vars=”ytid=IBkti560VZU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9743″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.