shadow

கனமழை காரணமாக ஏற்கனவே ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மொத்தம் 12 மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் பள்ளிகள் கல்லூரிகள் கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம், திருவாரூர் புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.