shadow

துருக்கியில் நடந்தது செட்டப் ராணுவ புரட்சியா? ஒரு அதிர்ச்சி தகவல்

Turkey coup attemptதுருக்கி ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 3000 ராணுவ வீரர்கள் மற்றும் 2750 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிரடியாக இந்த புரட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த 8777 அரசு ஊழியர்களை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நேற்று பணிநீக்கம் செய்தது.

இந்நிலையில் புரட்சியின்போது உயிரிழந்த போலீஸார், பொதுமக்களின் இறுதிச்சடங்கு இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் பங்கேற்றார். அப்போது, புரட்சி வீரர்களை தூக்கிலிட வேண்டும் என்று ஒருதரப்பினர் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் மத்தியில் பேசிய அதிபர் எர்டோகன், ‘ஜனநாயக நாட்டில் மக்களின் மதிப்புக்கே முதலிடம் அளிக்கப்படும்’ என்று கூறினார்.

துருக்கியில் தற்போது மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தடை விரைவில் விலக்கப்படும் என்றும் புரட்சியாளர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் துருக்கி அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர்.

துருக்கி ராணுவ புரட்சிக்கு அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலனே காரணம் என்று கூறப்படும் நிலையில் இதுகுறித்து பெதுல்லா குலன் நிருபர்களிடம் கூறியதாவது: துருக்கியில் கடந்த கால ராணுவ புரட்சிகளின்போது நான் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளேன். அடிப்படையில் நான் ராணுவ புரட்சிக்கு எதிரானவன். அதிபர் எர்டோகன் ஒரு நாடகத்தை அரங்கேற்றி ராணுவ புரட்சி நடந்ததாகவும் அதை மக்களின் துணையோடு முறியடித்துவிட்டதாகவும் கூறிவருகிறார். இது உண்மையான ராணுவ புரட்சி என்றால் இப்போது ஆட்சி மாறியிருக்கும். துருக்கியின் நிரந்தர அதிபராக நீடிக்க போலியான ராணுவ புரட்சியை எர்டோகன் நடத்தியுள்ளார். அதன்பேரில் ராணுவம், நீதித் துறை, அரசு நிர்வாகத்தில் தனது எதிரிகளை அவர் அழித்து வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply