shadow

ரூ.10 ஆயிரத்துக்கு பதிலாக அல்வா கொடுத்த டிடிவி ஆட்கள்! பரிதாபத்தில் ஆர்.கே.நகர் மக்கள்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தொகுதி முழுவதும் பணம் ஆறாக பாய்ந்த நிலையில் தற்போது அந்த ஆறு வறண்டு போயுள்ளது.

ஆம் தேர்தலுக்கு முந்தைய நாள் ரூ.20 டோக்கன் கொடுத்து தேர்தலுக்கு பின்னர் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று டோக்கன் வாங்கிய நபர்களுக்கு அழைப்பு விடுத்த டிடிவி தினகரன் தரப்பினர் வாக்காளர்களிடம் ரூ. 20 டோக்கனை பெற்றுக் கொண்டு ஒரு பண்டலை கொடுத்துள்ளனர்.

அந்த பண்டலில் ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று கூறியதை நம்பி வீட்டிற்கு வந்து திறந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அந்த பண்டலில் பணத்திற்கு பதிலாக மஸ்கோத் அல்வா இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கவும் முடியாமல் ஏமாற்றத்துடன் மக்கள் உள்ளனர்,

Leave a Reply