shadow

தினகரனின் திடீர் டெல்லி பயணம் ஏன்? அதிர்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி?

தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக உள்ள நிலையில் நேற்றிரவு தினகரன் திடீரென டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு அவர் ஏன் சென்றுள்ளார், யாரை சந்திக்க போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திகார் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று சென்னை திரும்பிய தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவருக்கு 30க்கும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளதால் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடியார் எப்போது வேண்டுமானாலும் தூக்கியடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினகரனை சமாளிக்க ஓபிஎஸ் அணியுடன் இணைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தினகரனின் திடீர் டெல்லி பயணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Leave a Reply