shadow

டிடிவி தினகரனிடம் இன்றும் விசாரணை தொடர்கிறது. திரும்பி வருவாரா? கைது செய்யப்படுவாரா?

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று டெல்லியில் ஆஜரான டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரனையும் நேரில் வைத்து தினகரனிடம் விசாரணை செய்ததால் பல உண்மையில் வெளிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தினகரனின் செல்போனையும் வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் இன்று மதியம் இரண்டு மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். எனவே டிடிவி தினகரனிடம் இன்று விசாரணை தொடரும் இன்றைய விசாரணை முடிந்த பின்னர்தான் அவர் விடுவிக்கப்படுவாரா? அல்லது கைது செய்யப்படுவாரா? என்பது தெரியும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டிடிவி தினகரனின் உதவியாளர் ஜனார்தனனிடமும்  டெல்லி போலீசார் தனி அறையில் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். சுகேஷ் சந்திராவிடம் தினகரன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டாரா என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply