shadow

சித்தி சசிகலாவுக்கும் சித்தப்பா நடராஜனுக்கும் 27 வருஷமா தொடர்பே இல்லை : டிடிவி தினகரன்!

அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது சித்தி சசிகலாவும், சித்தப்பா நடராஜனும் 27 வருடமாக தொடர்பில் இல்லாமல் இருந்ததாகவும், எனவே அவருடைய கருத்துக்கள் அதிமுகவின் கருத்துக்கள் என்று எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பின்னால் இருந்து அவருடைய கணவர் நடராஜன் தான் இயக்குவதாக ஒருசிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டிடிவி தினகரன், ‘நடராஜன் கூறும் கருத்துக்களை அதிமுகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. நடராஜன் 1990க்கு பிறகு போயஸ்கார்டன் வீடு பக்கமே வரவில்லை. சின்னம்மா சசிகலா உடன் அவர் எந்த தொடர்பிலும் இல்லை’ என்று கூறினார்

ஆனால் எந்த தொடர்புமே இல்லாதவர் சசிகலா பெங்களூருக்கு சிறைக்கு செல்வதற்கு முன்னர் கணவரை கட்டிப்பிடித்த அழுதது ஏன்? என்று அந்த பேட்டியாளர் கேள்வி கேட்கவில்லை என்றாலும் அதிமுக தொண்டர்களும், மக்களும் சமூக இணையதளங்கள் வாயிலாக கேட்டு வருகின்றனர்.

Leave a Reply