shadow

சென்னை திரும்பிய தினகரனுக்கு மலர் தூவி வரவேற்பு

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற டிடிவி தினகரனுக்கு நேற்று ஜாமீன் கிடைத்த நிலையில் இன்று அவர் சென்னை திரும்பினார். சிறையில் தினகரன் இருந்தபோது அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும், சசிகலா குடும்பத்தினருடன் இனி எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்றும் அதிமுக அம்மா அணியின் தலைமை கூறியிருந்த நிலையில் இன்று விடுதலையான தினகரனுக்கு தலைமையையும் மீறி சென்னையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சென்னை திரும்பிய தினகரனுக்கு அதிமுக அம்மா அணியினர் சிறப்பான வரவேற்பு அளித்த நிலையில் அவரை மீண்டும் கட்சிப்பணி ஆற்ற அனுமதிப்பதா? கூடாதா? என்பது குறித்த ஆலோசனைகளை அதிமுக அம்மா அணியினர் செய்து வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் கவலைப்படாத தினகரன் என்னை கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் நான் மீண்டும் கட்சிப்பணியை ஆற்றுவேன் என்றும் கூறி வருகிறர். இதனால் அதிமுக அம்மா அணியில் இனிவரும் நாட்களில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply