shadow

சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த டிடிவி தினகர்ன

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 2021ஆம் ஆண்டு தான் வரும் என்று இருந்தாலும் எந்த நேரத்திலும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாகவும், குறைந்தபட்சம் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன், 3 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் டி.கே.ராஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டியில் பி.பழனியப்பன், அரூர் (தனி)தொகுதியில் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நிருபர்களிடம் தினகரன் தெரிவித்துள்ளார். இதே போல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில், வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையை ஏற்கும் தி.மு.க. தவிர, மதசார்பற்ற எந்த கட்சியும் எங்களின் கூட்டணிக்கு வரலாம் என்றும் தமிழகத்தில் நல்லாட்சி மலர, நாங்கள் அனைத்து கட்சியினரையும் வரவேற்கிறோம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

 

Leave a Reply