shadow

தினகரன்: முதல் நாள் 7 மணி நேரம், 2ஆம் நாள் 10 மணி நேரம். இன்றும் தொடர்கிறது விசாரணை


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை செய்து வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை செய்யவுள்ளனர்.

நேற்று முன் தினம் ஏழு மணி நேரமும், நேற்று பத்து மணி நேரமும் டிடிவி தினகரனிடம் துருவி துருவி விசாரணை செய்த டெல்லி போலீசார் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என்று தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்தணனும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் இன்று மாலை மூவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளனர்.

இன்றுடன் விசாரணை முடிந்துவிடும் என்றும் விசாரணையின் முடிவில் அதிரடி முடிவு எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply