பெண் நீதிபதியுடன் அத்துமீறி செல்பி எடுத்த இளைஞருக்கு சிறை
பெண் நீதிபதி ஒருவருடன் அத்திமீறி செல்ஃபி எடுத்த இளைஞர் ஒருவர் உ.பி மாநில சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் புலந்தசகர் மாவட்ட பெண் நீதிபதியாக இருப்பவர் சந்திரகலா. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நீதிபதி சந்திரகலா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் அவருடன் ’செல்ஃபி’ எடுக்க முயற்சி செய்தார். பெண் நீதிபதி அந்த இளைஞரை எச்சரித்தும், அத்துமீறி நீதிபதியுடன் ‘செல்ஃபி’ எடுப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி சந்திரகலா, பாதுகாப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து இளைஞரிடம் போலீசார், மொபைலில் உள்ள செல்ஃபி போட்டோக்களை அழிக்க கூறியுள்ளனர். ஆனால் அவர், என்னுடைய மொபைல் , நான் அழிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அத்துமீறி நடந்துகொண்ட அந்த இளைஞரை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அந்த இளைஞரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் காரணமாக தற்போது அந்த இளைஞர் சிறையில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.