டிரம்புக்கு சொந்தமான மேலும் ஒரு கட்டிடத்தில் தீவிபத்து
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு சொந்தமான நியூயார்க் கட்டிடம் ஒன்றில் இம்மாதம் 7-ம் தேதி தீவிபத்து நடந்த நிலையில் தற்போது அவருக்கு சொந்தமான அஜர்பைஜான் நாட்டில் உள்ள டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் 33 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடத்தில் நேற்று திடீரென தீ பற்றியது. அங்கு பிடித்த தீ மளமளவென பரவியது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.
தகவலறிந்து அங்கு நான்கிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 50க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.
அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கட்டிடங்கள் தொடர்ந்து தீவிபத்தில் சிக்கி வருவது மர்மமாக இருப்பதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.