shadow

ஹார்வே புயல் நிவாரணம்: சொந்த பணத்தில் $1 மில்லியன் வழங்கிய டிரம்ப்

சமீபத்தில் ஹார்வே புயல் காரணமாக அமெரிக்காவின் சில பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு மில்லியன் டாலர் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பே பெரிய கோடீஸ்வரராக இருந்த டிரம்ப், அமெரிக்க அரசின் மூலம் மில்லியன் கணக்கில் நிவாரண நிதியாக செலவு செய்து கொண்டிருந்த போதிலும் தனது சொந்த பணத்தில் இருந்தும் நிதி வழங்கியுள்ளார்.

இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சண்டர்ஸ் உறுதி செய்துள்ளார். நிவாரண நிதியாக போதுமான பணம் உள்ளதால் நிவாரண பணிகள் மின்னல் போல் நடந்து வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply