நீங்கள் ட்ரூ காலர் ஆப்ஸ் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு ஒரு சோகமான செய்தி
புதிய மொபைல் நம்பரிலிருந்து யாராவது அழைக்கும் பட்சத்தில் அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளவும், எங்கிருந்து அழைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் ட்ரூகாலர் ஆப்ஸை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் இந்த ஆப்ஸை 80 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்களாம்.
இந்நிலையில் இந்த வருடத்தின் இறுதியில் இருந்து இனி ட்ரூகாலர் ஆப்ஸை கட்டணம் செலுத்தியே பயன்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கையில் ட்ரூகாலர் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இச்செய்தியை அந்நிறுவனத்தின் ஆசிய துணைத்தலைவர் மற்றும் இந்திய மேலாளரான காரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 150 மில்லியனாக காணப்படுகிறது. தற்போது இந்த ஆப்ஸ் மூலம் குறுஞ்செய்திகளையும் அனுப்ப முடியும், தேவையற்ற குறுஞ்செய்திகளை ஆப்ஸ் அதுவாகவே ஃபில்டர் செய்துவிடும் என்கிற தகவலையும் காரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.