முதல்வர் மகளுக்கு பன்றிக்காய்ச்சல். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் மகளும், பாராளுமன்ற எம்.பியுமான கே. கவிதாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள கார்ப்பரேஷன் மருத்துவமனை ஒன்றில் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவிதா எம்.பிக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புக்கான மருந்துகள் வழங்கப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.