‘நாயகி’க்காக த்ரிஷா பாடும் முதல் பாட்டு
கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களாக முன்னணி இடத்தில் இருந்து வரும் நடிகை த்ரிஷா இன்றும்கூட இளம் நாயகிகளுக்கு போட்டியாக பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘அரண்மனை 2’ திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது ‘நாயகி’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.
த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்து வரும் இந்த படத்தை கோவி என்பவர் இயக்குகிறார். கடந்த 1980ஆம் ஆண்டுகளில் நடக்கும் இந்த கதைக்காக த்ரிஷாவின் காஸ்ட்யூம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் த்ரிஷா இந்த படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் செய்ய முடிவு செய்திருக்கும் நிலையில் ஒரு பாடலையும் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷா பாடும் முதல் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவுள்ள இந்த படத்தில் ‘அபியும் நானும்’ படத்திற்கு பின்னர் மீண்டும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.