த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதனை திரிஷா தனது டுவிட்டரில் மறுத்தபோதும் வருண்மணியன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இருக்கின்றார்.
ஆனால் வருண்மணியனுடன் த்ரிஷா நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று அவர் சொல்வது பொய் என திரையுலகை சேர்ந்தவர்களே கூறி வருகின்றனர்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த லட்சுமிராய், நடந்ததை மறைக்கும் த்ரிஷா ஒரு கோழை என கண்டனம் தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவுக்கு உண்மையிலேயே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும்அடுத்த வருடம் மார்ச் மாதம் இருவருக்கும் திருமணத்தை முடிக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்து இருப்பதாக த்ரிஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில் த்ரிஷாவுக்கு வந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு கைமாறுகின்றன. அத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு வருகிறார். ‘உதயம் NH4 ’ என்ற படத்தை எடுத்த மணிமாறன் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்க ஜெய், திரிஷா தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். தற்போது திரிஷாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இவன் வேற மாதிரி படத்தில் நாயகியாக நடித்த சுரபியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.