shadow

trishaகடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை த்ரிஷாவுக்கு நேற்று பிரபல தொழிலதிபர் வருண்மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது.

த்ரிஷா சிவப்பு நிற பட்டுப்புடவையும், வருண்மணியன் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தனர். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் த்ரிஷாவுக்கு டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலம் அவரது சக நடிகர்கள், மற்றும் நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிச்சயதார்த்ததிற்கு த்ரிஷா மற்றும் வருண் மணியனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர். த்ரிஷாவின் திருமணம் இவ்வருட இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது. த்ர்ஷா தற்போது மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அந்த படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்வார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply