shadow

trishaசென்னை தொழிலதிபரும் வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான வருண் மணியன் என்பவருடன் த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகிக்கொண்டு வருகின்றன. இந்த தகவலை த்ரிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.

‘எனக்கு இன்னும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை. அப்படி ஒன்று நிகழ்ந்தால் கண்டிப்பாக நானே எனது ரசிகர்களுக்கு முதல் ஆளாக தகவல் தெரிவிப்பேன்’ என்று த்ரிஷா டுவிட்டரில் வதந்திகளுக்கு முற்றுப்பள்ளி வைத்தார்.

இருப்பினும் த்ரிஷாவின் வதந்தி காட்டுத்தீயை விட மிக வேகமாக பரவி வருகிறது. தெலுங்கு ஊடகம் ஒன்று த்ரிஷா கர்ப்பமாகிவிட்டதாகவும் அதன் காரணமாகத்தான் அவர் அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தாத செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

த்ரிஷா கோலிவுட்டில் இடையில் கொஞ்சம் சறுக்கினாலும் மீண்டும் தற்போது தன்னுடைய பழைய இடத்தை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறார். அஜீத்துடன் அவர் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரிலீஸானால் அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் மாறும். இதை மனதில் வைத்து அவருடைய போட்டி நடிகைகள் சேர்ந்து செய்யும் சதி என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் த்ரிஷா இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது. எனவே த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் வெறும் வதந்திதான் என்பது உறுதியாகிறது.

Leave a Reply