பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் 7 பேர் கைது
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். சென்னை மக்கள் மின்சார மற்றும் மெட்ரோ ரயில் மூலம் ஓரளவு சமாளித்து கொண்டாலும் தமிழகத்தின் பிற பகுதியில் உள்ளவர்கள் குறிப்பாக கிராமப்புற பகுதியில் உள்ளவர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தினக்கூலி அடிப்படையில் ஓரளவு பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆனால் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தினக்கூலி அடிப்படையில் பேருந்துகளை இயக்குபவர்களை ஆங்காங்கே தாக்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பேருந்துகளின் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த போக்குவரத்து ஊழியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 7 பேர் கைது கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
Leave a Reply
You must be logged in to post a comment.