shadow

ஏர்செல்லில் பயன்படுத்தாத பேலன்ஸை திருப்பி அளிக்க டிராய் உத்தரவு

ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் இருக்கும் பயன்படுத்தாத பேலன்ஸ் தொகையை திருப்பி அளிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் பிரபலமாக விளங்கிய ஏர்செல், சமீப காலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்ததுதோடு, கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல், பெரும் இழப்புகளை ஏர்செல் சந்தித்தது.

மேலும் சிக்னல் பிரச்சனை, சரியான அணுகுமுறை இல்லை எனக் கூறி, ஏர்செல்லில் இருந்து வாடிக்கையாளர்கள் வெளியேறத் தொடங்கினர். இந்த நிலையில் ஏர்செல் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களின் பயன்படுத்தாத தொகை, பாதுகாப்பு முன் பணம் ஆகியவற்றை திரும்ப அளிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விரிவாக அறிக்கையை மே 10க்குள் சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் புதிதாக மாறியுள்ள நெட்வொர்க், உரிய பணத்தை சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்த்து, அதனை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும்.

Leave a Reply