டிராபிக் ராமசாமி திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் அனுமதி
பொதுநல வழக்கு என்றாலே உடனே ஞாபகம் வரும் அளவுக்கு ஏராளமான பொதுநல வழக்குகளை தாக்கல் செய்த டிராபிக் ராமசாமி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினமும் ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்காக சென்னை ஐகோர்ட் சென்ற டிராபிக் ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை பொதுமக்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதலில் திவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டிராஃபிக் ராமசாமி , பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். டிராஃபிக் ராமசாமிக்கு இதய சம்பந்தபட்ட நோய்கள் இருப்பதால் அவர் மயக்கமடைந்தார் என்றும் , அவருக்கு சிறப்பான முறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.