சென்னை உள்பட தமிழகத்தில் மழை தொடரும்: நாளை விடுமுறையா?

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

குறிப்பாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது

சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நாளை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் நாளைய நிலைமை பொறுத்தே விடுமுறை குறித்த முழுமையான விபரங்கள் தெரியவரும்

Leave a Reply