shadow

kissoflove_20141102கடந்த சில நாட்களாக முத்தம் கொடுக்கும் போராட்டம், கட்டிப்பிடிக்கும் போராட்டம் என பரபரப்பை கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்படுத்தி வந்த நிலையில் நாளை கேரள மாநில பேஸ் புக் ஆர்வலர்கள் கோழிக்கோட்டில் மாலை 4 மணிக்கு முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

‘தெருவில் சும்பனம் 2.0’ என்ற பெயர் வைத்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பேஸ் புக் பயனாளிகள் இந்த தகவலை ஃபேஸ்புக்கின் பல பகுதிகளில் உலவவிட்டுள்ளனர். முதலில் கோழிக்கோடு பீச்சில் நடப்பதாக இருந்ததாக அறிவிக்கப்பட்டு பின்னர்  இந்த போராட்டம் கோழிக்கோடு புறநகர் பஸ் நிலையத்தில் நடக்கும் என்றும் போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.

இதுபற்றி கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறும்போது, இந்த போராட்டம் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. போராட்டம் நடந்தால் நடக்கட்டும். அதை வேடிக்கை பார்ப்பவர்கள் பார்க்கட்டும். போலீசார் இதில் தலையிட போவதில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply