shadow

முன்னாள் கேப்டன் சொந்த ஊரில் இந்நாள் கேப்டன் சாதிப்பாரா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. புனேவில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1-1 என்ற புள்ளிக்கணக்கில் உள்ளது.

இந்நிலையில் நாளை முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சொந்த ஊர் மைதானமான ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முயற்சி செய்யும் என்பதால் ஆட்டம் முதல் நாள் முதல் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோணியின் சொந்த மண்ணில் அவரது சிஷ்யரான விராத் கோஹ்லி வெற்றியை ருசிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply