4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: நாளையும் விடுமுறையா?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தினமும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பால் நாளையும் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.