சிலி நாட்டில் ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தக்காளியால் ஒருவர் மீது ஒருவர் எறியும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 50 டன்கள் தக்காளிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 12000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தக்காளிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்தபடி விளையாடினர். இந்த நிகழ்ச்சிக்கேற்ப விறுவிறுப்பான இசையும் ஒலிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிலி நாட்டின் QUILLON என்ற நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதே நிகழ்ச்சி வெவ்வேறு காலகட்டத்தில் கொலம்பியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் War of Tomato என்ற பெயரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1e0Op7u” standard=”//www.youtube.com/v/Vtpb52NUe6c?fs=1″ vars=”ytid=Vtpb52NUe6c&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1057″ /]

Leave a Reply