shadow

இன்று வைகுண்ட ஏகாதேசி. பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
temple1
பெருமாள் பக்தர்களுக்கு முக்கிய திருநாளான இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள பெருமாள்  குறிப்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில், கும்பகோணம் நாச்சியார் சீனிவாச பெருமாள் கோயில், சீர்காழி தாராளன் பெருமாள் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை அழகர் கோயில், விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அருகே உள்ள கலிங்கமலை ரங்கநாதர் கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றதுtemple

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில், ஆத்தூர் வெங்கடேச பெருமாள் கோயில், போடி சீனிவாச பெருமாள் கோயில் கோயில் ஆகிய பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பக்தரகள் கோவிந்தா… கோவிந்தா… என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.temple2

திருச்சி அருகேயுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சொர்க்க வாசலில், ரங்கநாதர் சுவாமி அருள்காட்சி தந்தார். எதிர்சேவையில் நம்மாழ்வாருக்கு காட்சி தந்த ரங்கநாதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா… ரங்கா… என்ற முழக்கத்துடன் வணங்கி தரிசனம் செய்தனர்.temple3

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார். எதிர்சேவையில் காட்சி தந்த பார்த்தசாரதி பெருமாளை கோவிந்தா… கோவிந்தா… என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply