shadow

இன்று வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை: பயனுள்ளதாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை

வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடக்கவிருக்கின்றது. இந்த பேச்சுவார்த்தையில் நடைபெறுவது என்னவாக இருக்கும் என்பதை அறிய உலகமே காத்திருக்கின்றது. இந்த நிலையில் வடகொரிய அதிபருடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முடிந்து, டிரம்ப் இன்று அமெரிக்கா திரும்புகிறார். ஒரு நாள் முன்னதாக உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு அவர் சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா திரும்புவதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு (இந்திய நேரம் காலை 6.30 மணி) சந்தித்து பேச்சுவார்தை நடத்துகிறார்கள். இதற்காக இரு தலைவர்களும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.

Leave a Reply