shadow

சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்: ஸ்டாலின்

பெரும் பரபரப்புக்கு இடையே இன்று தமிழக சட்டமன்றம் கூடவுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இன்று தமிழக கவர்னர் உரையுடன் சட்டமன்றம் தொடங்குகிறது.

ஓகி புயல், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தினகரன் இன்று முதல்முறையாக சட்டமன்றத்திற்கு செல்லவுள்ளதால் அவருடைய முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கதாகவுள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் வாய்ப்பு வந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்போம் என தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply