shadow

தமிழகத்தில் ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மூன்றாவது வாரமாக மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு மெகா தடுப்பூசி மையம் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட வேண்டியவர்கள் இன்றைய தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்

சென்னையைப் பொறுத்தவரை 1,600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.