அமெரிக்காவின் புவியியல் கண்காணிப்பு நிறுவனமான யூஸ்க்ஸ் (U.S. Geological Survey) இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெற்கு பசுபிக் கடலில் உள்ள தீவுகளில் ஒன்றான வ்யாநுவாடு என்ற பகுதியில் இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவுக்கு கடுமையான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிலநடுக்கதால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வரவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 3.00 மணிக்கு வ்யாநுவாடு தீவின் தலைநகருக்கு 443 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் இந்த நிலநடுக்கம் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலு இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 196 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் நிலப்பகுதிகளுக்கு பெரிய ஆபத்து இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவு அருகே பயங்கர எரிமலைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.