shadow

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5வது ஒருநாள் போட்டி. ஆறுதல் வெற்றி அடையுமா இந்தியா?
cricket
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகள் தோல்வி அடைந்த நிலையில் இன்று சிட்னி நகரில் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஒரு போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றி அடையவேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால் தரவரிசையில் தற்போதுள்ள இரண்டாவது இடத்தை இழந்துவிடும் அபாயம் இருப்பதால் இந்திய வீரர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக வெல்ல ஆஸ்திரேலிய வீரர்களும் முனைப்புடன் உள்ளனர். மேலும் இன்று போட்டி நடைபெறவுள்ள சிட்னி நகரில் மழை வர வாய்ப்பு இருப்பதாகவும் அதன் காரணமாக இந்த போட்டி முழுமையாக 50 ஓவர்கள் நடப்பது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply