shadow

இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.

நேற்று தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் சென்னையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்துள்ளது இந்த முழு ஊரடங்கின்போது வாகன தணிக்கை செய்ய 10,000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

மருத்துவம் மற்றும் அவசர தேவை தவிர யாரும் வெளியே வரக்கூடாது என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.