shadow

இன்று 4வது டெஸ்ட் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியும், 3வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியும் பெற்ற இந்திய அணி இன்று தொடங்கும் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியில் முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் பேட்ஸ்மேன்களான ஹனுமா விஹாரி மற்றும் ப்ரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் மூன்று போட்டிகளிலும் முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் சோபிக்காததால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளம் வீரர்களால் அணிக்கு புத்துணர்வு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply