shadow

டி.என்.பி.எஸ்.சி. 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது 11 டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களை நியமனம் செய்தார். இந்த நியமனம் முறையற்றது என்று திமுக தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதுகுறித்து மேல்முறை செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply