சென்னை: 1130 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற 2013 – 14ம் ஆண்டின் ஒருங்கிணைந்த குடிமையியல் பணித் தேர்வு – II (தொகுதி -II) எழுதியோரிலிருந்து, தகுதியான 5635 பேர், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 26ம் தேதி முதல் மே மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்டவர்கள், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். தேதி மற்றும் நேரத்தை தவற விடுவோருக்கு, மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.