நாளை விடுமுறை ரத்து: அதிரடி அறிவிப்பால் பரபரப்பு
மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை மாபெரும் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியில் மக்கள் நீதி மையம் கட்சி உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த பேரணி நாளை நடைபெறவிருப்பதை அடுத்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:
சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும். நாளைய விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. நாளை திமுக பேரணி நடைபெறவுள்ள நிலையில் போக்குவரத்து கழகம் இந்த அதிரடி அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது போக்குவரத்து ஊழியர்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.