எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வுக்கு திடீர் சிக்கல்
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட்ட எம்.எல்.ஏக்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பேருந்து ஊழியர்களின் பிடித்தப்பணத்தை தர முடியாத அரசு, பேருந்து கட்டணங்களை உயர்த்தி பொதுமக்களை இம்சிக்கும் அரசு, எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் ஊதியத்தை உயர்த்துவது எந்த வகையில் நியாயம் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு மசோதாவுக்கு தமிழக கவர்னர் இன்னும் கையெழுத்திடவில்லை என்ற செய்தி வெளிவந்துள்ளது. இன்று எம்.எல்.ஏக்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டிய நாள் என்பதால் இன்னும் மசோதா கையெழுத்து ஆகாததால் பழைய ஊதியமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2 மடங்காக உயர்த்தப்பட்ட புதிய ஊதியம் அடுத்த மாதம் வழங்கப்படும் என பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.