சிங்கப்பூர்:தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதா வுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் வெள்ளத்தால் நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. ‘வெள்ளம் சீக்கிரம் வடிந்து, உங்கள் தலைமையின் கீழ், தமிழகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’ என சிங்கப்பூரின் பெரும்பான்மை மக்களைப் போல நானும் விரும்புகிறேன்.
இந்த இக்கட்டான தருணத்தில் தமிழக மக்களுக்கு சிங்கப்பூர் அரசு உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.’செம்பரம்பாக்கம் ஏரி ஓகே’ சென்னை, டிச. 6-தமிழக அரசின் செய்திக்குறிப்பு:’செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்தின் உயரம் 24 அடி. 21.95 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 3,493 கன அடியாக உள்ளது. வினாடிக்கு 3,500 கன அடி வெளியேற்றப்படுகிறது; நீர் தேக்கம் பாதுகாப்பாக உள்ளது’, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.