shadow

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏக்களா? பரபரப்பு தகவல்

தமிழக கவர்னர் இன்று சென்னை வருகை தரவுள்ளதாகவும், சசிகலா தான் ஆட்சி அமைக்க அவரிடம் உரிமை கோருவார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஓபிஎஸ் அவர்களுக்கு 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தர முன்வந்துள்ளதாகவும், எனவே கவர்னர் சென்னை திரும்பினாலும் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோருவாரா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஓபிஎஸ் நேற்று அளித்த பேட்டியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி தொகுதி மக்களின் விருப்பத்தின்படி செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது வெளிப்படையாக 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் இன்று மாலைக்குள் மேலும் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வெளிப்படையாக தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply