shadow

தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவர்: கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்வர் கண்டனம்

காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா திட்டமிட்டுள்ள நிலையில் புதிய அணை கட்டுவதை அனுமதிக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளை சமாதானம் செய்து மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் கூறியதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘குடிநீருக்காக, 3 டி.எம்.சி., நீர் கேட்டதற்கே, கர்நாடகம் தர மறுத்ததாகவும், தவித்த வாய்க்கு தண்ணீர் தராத கர்நாடக முதல்வர் மேகதாதுவில் அணை கட்டினால் மட்டும், எப்படி தண்ணீர் தருவார்?’ என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது காவிரியில் வெள்ளம் புரண்டு ஓடுவதை காரணம் காட்டி மேகதாதுவில் புதிய அணை கட்டலாம் என்ற கருத்தை கர்நாடக முதல்வர் கூறினார். தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணண கட்டமுடியாது என்பதால் அவர் தமிழக தலைவர்களை சமாதானம் செய்யலாம் என்று நினைத்தார். ஆனால் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அணை கட்ட அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளதால் கர்நாடக மாநிலத்திற்கு இது தோல்வியாகவே கருதப்படுகிறது.

Leave a Reply